உலக அளவில் கொரோனா பெருந்தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 67.33 கோடியாக உயர்வு
By: vaithegi Mon, 23 Jan 2023 09:02:11 AM
வாஷிங்டன்: சீனாவின் உகான் நகரில் 3 ஆண்டுகளுக்கு முன்பு, 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன் முதலில் கொரோனா வைரசின் பாதிப்பு கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது.
இதனை அடுத்து தற்போது கொரோனா வைரசானது 228-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி கூண்டு வருகிறது.
எனவே கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்த வைரஸ் தொடர்ந்து பரவி கொண்டு வருகிறது.
இதையடுத்து இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 கோடியே 33 லட்சத்து 26 ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 13 லட்சத்து 94 ஆயிரத்து 001 பேர் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை மட்டும் 64 கோடியே 51 லட்சத்து 86 ஆயிரத்து 606 பேர் குணமடைந்துள்ளனர். இருப்பினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை மட்டும் 67 லட்சத்து 46 ஆயிரத்து 377 பேர் உயிரிழந்துள்ளனர்.