உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59.51 கோடியாக உயர்வு
By: vaithegi Mon, 15 Aug 2022 07:46:29 AM
வாஷிங்டன்: சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டு வருகிறது.
எனவே கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது.
இதை அடுத்து இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 கோடியே 51 லட்சத்து 68 ஆயிரத்து 628 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 2 லட்சத்து 77 ஆயிரத்து 799 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை மட்டும் 56 கோடியே 84 லட்சத்து 36 ஆயிரத்து 257 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை மட்டும் 64 லட்சத்து 54 ஆயிரத்து 572 பேர் உயிரிழந்துள்ளனர்