Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா இறப்பு விகிதத்தை 1 சதவீதமாக கொண்டு வருவதே இலக்கு; அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா இறப்பு விகிதத்தை 1 சதவீதமாக கொண்டு வருவதே இலக்கு; அமைச்சர் விஜயபாஸ்கர்

By: Monisha Fri, 25 Sept 2020 09:37:35 AM

கொரோனா இறப்பு விகிதத்தை 1 சதவீதமாக கொண்டு வருவதே இலக்கு; அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 63 ஆயிரத்து 691 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 8 ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 76 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறை மற்றும் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

corona virus,infection,mortality rate,minister vijayabaskar,corona prevention work ,கொரோனா வைரஸ்,பாதிப்பு,இறப்பு விகிதம்,அமைச்சர் விஜயபாஸ்கர்,கொரோனா தடுப்பு பணி

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்காமல் கட்டுப்படுத்தி வருகிறோம். இதை 5 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.4 சதவீதத்தில் இருந்து 1.2 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது சராசரியாக ஒரு நாளுக்கு 129 என்ற எண்ணிக்கையில் இருந்த இறப்பு, 70 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த இறப்பு விகிதத்தை 1 சதவீதமாக கொண்டு வருவதே எங்களது இலக்கு. தொற்றில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கையும் 90.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. கொரோனா தடுப்பு பணி மற்றும் நிவாரண நிதிக்கு ரூ.7,322.59 கோடி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags :