பரண்மேல் கொட்டகை அமைத்து ஆடு வளர்ப்பு: செம லாபம் பார்க்கும் விவசாயி
By: Nagaraj Mon, 18 Sept 2023 10:24:27 PM
ஈரோடு: பரண்மேல் கொட்டகை அமைத்து ஆடு வளர்ப்பதால் குறைந்த செலவில் அதிக லாபம் கிடைப்பதாக ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த விவசாயி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில், பரண் மேல் கொட்டகை அமைத்து அதற்குள் ஆடுகளை வளர்த்து வருவதன் மூலமாக நல்ல லாபம் கிடைத்து வருவதாக விவசாயி தெரிவித்துள்ளார்.
நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அண்ணாமலை, தனது வீட்டுத் தோட்டத்தில் பரண் கட்டி அதில் ஜமுனாபாரி, தளச்சேரி ரக ஆடுகள் வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளை வளர்த்து வருகிறார்.
இந்த முறையால், குறைந்த பணமும், நேரமும் மட்டுமே செலவாவதோடு ஆடுகள் சுகாதாரமான முறையில் வளர்வதால் அதிக எடை கிடைப்பதோடு, ஆட்டின் கழிவுகள் இயற்கை உரமாக விவசாயத்திற்கும் கிடைத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
Tags :
profit |