முகக்கவசம் அணியாத ஆடு; காவல் நிலையம் இழுத்துச் சென்ற போலீசார்
By: Nagaraj Mon, 27 July 2020 4:18:26 PM
முகக்கவசம் அணியவில்லை என்று சாலையில் உலா வந்த ஆட்டை போலீசார் பிடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திடி உள்ளது.
இந்த வினோதமான சம்பவத்தை நடத்தியது கான்பூர் காவல்துறையினர்தான். இங்குள்ள பெக்கோஞ்சஞ்ச் பகுதியில் சாலையில் சுற்றித் திரிந்த ஒரு ஆட்டை 'முகக்கவசம் அணியாததால்' போலீசார் பிடித்து சென்றுள்ளனர். நேற்று நடந்த சம்பவம் தற்போது தெரிய வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாலையில் சுற்றித்திரிந்த ஆட்டை பெக்கன்கஞ்ச் போலீசார்ஜீப்பில் காவல்
நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதை பார்த்த அப்பகுதியினர் ஆட்டின்
உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஆட்டின்
உரிமையாளர் காவல் நிலையத்திற்கு விரைந்தார். அவர் போலீசாரிடம் மன்றாடினார்,
கடைசியில் போலீசார் அவரை ஆட்டைத் திரும்ப அழைத்துச் செல்ல அனுமதித்தனர்.
ஆனால், விலங்குகளை சாலையில் சுற்ற அனுமதிக்க வேண்டாம் என்று எச்சரித்து
அனுப்பினர்.