விநாயகர் சிலையில் இருந்த தங்கச்சங்கிலி: உரியவர்களிடம் ஒப்படைப்பு
By: Nagaraj Fri, 22 Sept 2023 6:13:10 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வேதாசலம் நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் செவிலிமேடு ஏரியில் விநாயகர் சிலைகளை கரைத்தபோது சிலையின் கழுத்தில் இரண்டரை சவரன் தங்க சங்கிலி உள்ளதை கண்டெடுத்தனர். போலீசார் மூலம் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
பழனியில் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சண்முகநதியில் கரைக்கப்பட்டது. மாலையில் துவங்கிய பேரணி இரவு வரை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன
இதேபோல் காஞ்சிபுரம் வேதாசலம் நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் செவிலிமேடு ஏரியில் விநாயகர் சிலைகளை கரைத்தபோது சிலையின் கழுத்தில் இரண்டரை சவரன் தங்க சங்கிலி உள்ளதை கண்டெடுத்தனர். போலீசார் மூலம் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
வீட்டில் விநாயகருக்கு தங்கச்சங்கிலி போட்டு பூஜை செய்துவிட்டு அப்படியே கரைக்கக் கொடுத்தனுப்பியது விசாரணையில் தெரிய வந்தது