மலேசியாவில் இருந்து கொச்சிக்கு கடத்தி வரப்பட்ட தங்க நகைகள் பறிமுதல்
By: Nagaraj Fri, 09 June 2023 7:42:49 PM
கொச்சி: கடத்தல் தங்கம் பறிமுதல்... மலேசியாவில் இருந்து கொச்சி விமான நிலையம் வந்த 4 பயணிகளிடமிருந்து 2 கிலோவுக்கு அதிகமான எடை கொண்ட வெளிநாட்டு தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விமான புலனாய்வு பிரிவினர் கைப்பற்றிய இந்த தங்க நகைகளின் மதிப்பு சுமார் 1 கோடியே 22 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கச்சட்டம் 1962-ன் கீழ் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், நகைகளைக் கொண்டுவந்த 4 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து தங்க நகைகள் பல வழிகளிலும் கடத்தப்பட்டு வருவதும் அதை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து பறிமுதல் செய்வதும் நடந்து வருகிறது. இருப்பினும் சில பயணிகள் ஏமாற்றி தந்திரமாக நகைகளை கடத்தி விடுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.