Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தங்கம் கடத்தல் அதிகரிப்பு... வளைத்து, வளைத்து பிடிக்கும் அதிகாரிகள்

தங்கம் கடத்தல் அதிகரிப்பு... வளைத்து, வளைத்து பிடிக்கும் அதிகாரிகள்

By: Nagaraj Tue, 11 Oct 2022 6:45:38 PM

தங்கம் கடத்தல் அதிகரிப்பு... வளைத்து, வளைத்து பிடிக்கும் அதிகாரிகள்

சென்னை: கடத்தப்படும் தங்கம்... துபாயில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களை பெரும்பாலும் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக அண்மைக்காலங்களில் செய்தி பரவி வருகிறது. இதன் அடிப்படையில் துபாயில் இருந்து சென்னை வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களில் சோதனை செய்யப்பட்டது.

இதில் சென்னை மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த இரண்டு பயணிகள் தங்களுடைய உள்ளாடைகளில் தங்க பசையை மறைத்து வைத்திருந்தனர். அடுத்து குவைத்தில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான பயணிகளிடம் சோதனை செய்தபோது அதில் சென்னையை சேர்ந்த நபர் தங்க வளையங்கள் மற்றும் மோதிரங்களை மறைத்து வைத்திருந்தார். இது பறிமுதல் செய்யப்பட்டது.

airport,chennai airport,customs officials,gold-smuggling ,சுங்க அதிகாரிகள், சென்னை, சோதனை, தங்கக் கடத்தல், விமான பயணி

அபுதாபியில் இருந்து சென்னை வந்த ஏர்லைன்ஸ் விமான பயணிகளிடம் சோதனையிட்டபோது, சிவகங்கையை சேர்ந்த மற்றொரு பயணி தன்னுடைய உள்ளாடைக்குள் தங்க பார்சல்களை மறைத்து வைத்திருந்தார். அதுவும் பறிமுதல் செய்யப்பட்டது.

இவ்வாறு தொடர்ச்சியாக 4 விமானங்களில் சோதனை செய்தபோது தங்க வளையல்கள். மோதிரங்கள் போன்றவை என மொத்தம் 3.5 கிலோ தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட 1.37 கோடி ஆகும். இந்த கடத்தலில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டனர்

Tags :