Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வந்த மகிழ்ச்சி செய்தி

வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வந்த மகிழ்ச்சி செய்தி

By: vaithegi Wed, 29 Nov 2023 12:06:00 PM

வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வந்த மகிழ்ச்சி செய்தி


இந்தியா: இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் எனவும், வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை நாட்களாக அமல்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் வங்கி தொழிற்சங்கங்கள் மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் இடையே 12 வது இருதரப்பு தீர்வு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் பொது துறை வங்கி பணியாளர்கள் சம்பளத்தில் 15%-20% அதிகரிப்பு மற்றும் 5 நாள் வேலை உள்ளிட்டவை டிசம்பர் மாத நடுவில் செயல்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

employees working in banks,salary increase ,வங்கிகளில் பணிபுரியும் ஊழியர், சம்பள உயர்வு

இதையடுத்து பணியாளர்களுக்கு 15% சலுகை வழங்கப்படுவது வரலாற்றிலேயே இதுவே முதன்முறை என ஐபிஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் அது மட்டுமில்லாமல் நிதி அமைச்சகத்தின் தகவல் படி ஊதிய திருத்தம் மற்றும் வேலை நாட்களில் மாற்றம் ஆகியவை பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இறுதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்பட்டு அதில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டு, பின் நிதி அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதும். இந்த அறிவிப்புகள் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :