4 மாவட்டங்களை தவிர்த்து மற்ற இடங்களில் அரசு பேருந்துகள் ஓடத்தொடங்கின
By: Monisha Mon, 01 June 2020 09:25:48 AM
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த 4-ம் கட்ட ஊரடங்கு கடந்த மே 31-ம் தேதியுடன் நிறைவுப்பெற்றது. இதையடுத்து 5-ம் கட்ட பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த சனிக்கிழமை அன்று அறிவித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை அறிவித்தார். அப்போது அவர் பல தளர்வுகளையும் பொதுமக்களுக்கு அறிவித்தார்.
அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. பொது பேருந்து போக்குவரத்தை இன்று முதல் அமல்படுத்துவதற்காக மாநிலத்தின் மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிதுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற பகுதிகளில் அரசு பேருந்துகள் இன்று காலை முதல் ஓடத்தொடங்கின. தமிழகத்தில் சுமார் 68 நாட்களுக்கு பின்னர் இன்று அரசு பேருந்துகள் இயங்கின.