Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை அதிகரித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை அதிகரித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

By: vaithegi Mon, 23 Oct 2023 09:32:35 AM

ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை அதிகரித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

பிரிவினர் 58 வயது வரை சேரலாம் என தமிழக அரசு அரசாணை வெளியீடு ... அரசாணயில்‌ வெளியிடப்பட்ட சிறப்பு விதிகளில்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்கீழ்‌ உள்ள பள்ளிகளில்‌, ஆசிரியர்‌ நேரடி நியமனம்‌ தொடர்பாக அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 53 என்றும்,

இதரப் பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் பணி நாடுநர்களுக்கு உச்சவயது வரம்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

ordinance,government of tamil nadu,teachers work ,அரசாணை ,தமிழ்நாடு அரசு,ஆசிரியர் பணி


இதையடுத்து இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “04.10.2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 53 என்றும், இதரப் பிரிவினருக்கு 58 என்றும்நிர்ணயம் செய்யப்படும் என அறிவித்திருந்தோம்.

எனவே அதன்படி 17 நாள்களிலேயே சொன்னதை செய்து முடித்து தற்போது அரசாணையையும் வெளியிட்டு உள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆசிரியப் பெருமக்களின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். #திராவிட_மாடல்” என அதில் குறிப்பிட்டு உள்ளார்.

Tags :