Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காதி, பனை வெல்லம் விற்பனை செய்ய ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை...தமிழக அரசு

காதி, பனை வெல்லம் விற்பனை செய்ய ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை...தமிழக அரசு

By: vaithegi Wed, 06 July 2022 08:30:09 AM

காதி, பனை வெல்லம்  விற்பனை செய்ய ரேஷன் கடை பணியாளர்களுக்கு  ஊக்கத்தொகை...தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் ரேஷன் கடைகளில் காதி பொருட்கள், அரசு உப்பு, பனைவெல்லம் போன்ற கட்டுப்பாடற்ற பொருட்களை விற்கும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி சில நிபந்தனைகளுடன் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

sales,incentives ,விற்பனை ,ஊக்கத்தொகை

ஒரு மாதத்தில் சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய வேண்டும் எனவும், கிராமப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய வேண்டும் எனவும், நகர்ப்புற ரேஷன் கடைகளில் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை பூர்த்தி செய்யும் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு, அம்மாதம் செலுத்தப்படும் விற்பனை தொகையில் ஒரு சதவீதம் ஊக்கத்தொகையாக கூட்டுறவு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|