Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் வெளியிட்ட இங்கிலாந்து அரசு

மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் வெளியிட்ட இங்கிலாந்து அரசு

By: Karunakaran Sun, 02 Aug 2020 5:00:16 PM

மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் வெளியிட்ட இங்கிலாந்து அரசு

உலகில் பல நாடுகள் காந்தியின் போதனைகளை தினந்தோறும் கற்று வருகின்றன. மேலும் அவரை ரோல் மாடலாக ஏற்று பல நாட்டில் தலைவர்கள் வாழ்ந்து வருகின்றனர். ரத்தம் சிந்தாமல் போராட்டம் நடத்தி, மக்களின் ஒற்றுமையின் மூலமும், அமைதியான போராட்டங்கள் மூலமும் ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்த முடியும் என்ற வித்தையை உலகுக்கு காந்தி கற்று கொடுத்துள்ளார்.

தற்போது, மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட ராயல் மின்ட் அட்வைஸரி கமிட்டி ஆலோசித்து வருவதாக இங்கிலாந்தின் நிதி மந்திரி ரிஷிசுனிக் தெரிவித்துள்ளார்.

united kingdom,coin,memory,mahatma gandhi ,இங்கிலாந்து, நாணயம், நினைவகம், மகாத்மா காந்தி

இதுகுறித்து இங்கிலாந்தின் நிதி மந்திரி ரிஷிசுனிக் கூறுகையில், மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட ராயல் மின்ட் அட்வைஸரி கமிட்டி ஆலோசித்து வருகிறது. காந்தி கருப்பு மற்றும் ஆசிய, பிற சிறுபான்மை இன மக்களை அங்கீகரிப்பதற்காக அரும் பாடு பட்டார் என்பதை ஆலோசனை குழுவிடம் தெரிவித்து உள்ளதாக கூறினார்.

மேலும் இது தொடர்பாக ராயல் மின்ட் அட்வைஸரி கமிட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயத்தை வெளியிட (ஆர்எம்ஏசி) முடிவு தற்போது பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|