Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா வைரசுக்கு பலியான டாக்டர் ஜாவத் அலி குடும்பத்துக்கு அரசு உதவ வேண்டும் - பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

கொரோனா வைரசுக்கு பலியான டாக்டர் ஜாவத் அலி குடும்பத்துக்கு அரசு உதவ வேண்டும் - பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

By: Karunakaran Thu, 23 July 2020 11:35:31 AM

கொரோனா வைரசுக்கு பலியான டாக்டர் ஜாவத் அலி குடும்பத்துக்கு அரசு உதவ வேண்டும் - பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸுக்கு எதிராக போராடி வரும் டாக்டர்கள், சுகாதார பணியாளர்களும் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் தேசிய சுகாதார திட்டத்தில் ஜாவத் அலி என்ற டாக்டர் கொரோனா காரணமாக உயிரிழந்தார்.

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த ஜாவத் அலி, கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரசுக்கு எதிரான பணியில் முன் வரிசையில் நின்று பணியாற்றினார். இதனால் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அவர் கிச்சை பலனின்றி கடந்த திங்கட்கிழமை உயிரிழந்தார்.

jawad ali,corona virus,priyanka gandhi,government

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா காரணமாக உயிரிழந்த ஜாவத் அலிகு டும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

டாக்டர் ஜாவத் அலி பற்றிய சோகமான செய்தி வந்தது. அவர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்துள்ளார். இப்படிப்பட்ட தியாகிகளின் குடும்பங்களுடன் நாம் நிற்க வேண்டிய நேரம் இது. அரசு, சாத்தியப்படும் அனைத்து உதவிகளையும் டாக்டர் ஜாவத் அலி குடும்பத்துக்கு செய்ய வேண்டும் என பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags :