Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து

By: Monisha Fri, 21 Aug 2020 10:54:31 AM

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படுவதையொட்டி கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுஇடங்களிலும், கோவில்களின் முன்பும் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. விநாயகர் சிலை ஊர்வலமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே பொதுமக்கள் அவரவர் வீடுகளில் சிறிய அளவிலான சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ganesha chaturthi,governor,banwarilal purohit,greetings ,விநாயகர் சதுர்த்தி,கவர்னர்,பன்வாரிலால் புரோகித்,வாழ்த்து,

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

தமிழக மக்களுக்கு சிறப்பான, வளமாக எதிர்காலம் அமைய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். விநாயகர் சதுர்த்தி திருநாள் அமைதி, செழிப்பு, நல்லிணக்கம், நல்ல உடல்நலத்தை வாரி வழங்கட்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags :