ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார்
By: vaithegi Wed, 18 Jan 2023 08:32:52 AM
புதுடெல்லி: டெல்லி புறப்பட்டார் .... சென்னை, தமிழ்நாடு மக்கள் மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிராக கவர்னர் ஆர்.என்.ரவி அவர்கள் செயல்படுவதாக தமிழக அரசு குற்றம் சாட்டி கொண்டு வருகிறது.இதையடுத்து கடந்த 12-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித் திமுக குழு, 20 நிமிடங்கள் அவருடன் பேசியது.
அதன் பின்னர், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சார்பில் புகார் மனு குடியரசுத் தலைவரிடம் கொடுக்கப்பட்டது. மேலும் இதே போன்று, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசுக்கு, கவர்னர் ஆர்.என்.ரவிக்கு மோதல் போக்கு உயர்ந்து வரும் நிலையில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மீண்டும் 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார்.
இதனை அடுத்து சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி சென்றார். டெல்லி செல்லும் கவர்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை சந்தித்து சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.