Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலக நாடுகளின் அனைத்து பிரச்சினைகளுக்கும் இந்தியாவில் தீர்வு உள்ளதாக ஆளுநர் தமிழிசை பெருமிதத்துடன் தெரிவிப்பு

உலக நாடுகளின் அனைத்து பிரச்சினைகளுக்கும் இந்தியாவில் தீர்வு உள்ளதாக ஆளுநர் தமிழிசை பெருமிதத்துடன் தெரிவிப்பு

By: vaithegi Mon, 04 Sept 2023 10:16:03 AM

உலக நாடுகளின் அனைத்து பிரச்சினைகளுக்கும் இந்தியாவில் தீர்வு உள்ளதாக ஆளுநர் தமிழிசை பெருமிதத்துடன் தெரிவிப்பு


சென்னை : சென்னை ‘ஆகாஷ்வாணி' சார்பில் நடத்தப்பட்ட ஜி20 மாநாட்டு நிகழ்ச்சிகளின் நிறைவு விழாதி.நகரில் நேற்று நடைபெற்றது. இதையடுத்து இந்த விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஜி20 மாநாட்டின் ஆய்வுக்கட்டுரை தொகுப்பை வெளியிட்டார்.

இந்த விழாவில் ஜி20 மாநாட்டையொட்டி நடத்தப்பட்ட இலக்கிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.

அதை தொடர்ந்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:- ஜி20 மாநாட்டுக்கு இந்தியா பொறுப்பேற்று இருப்பது சுழற்சி முறையில் நடந்ததாக கூறுகின்றனர். ஆனால் நமது முயற்சிகளின் பலனாகத்தான் இது சாத்தியாமாகி உள்ளது. இன்று உலகநாடுகளின் அனைத்து பிரச்சினைகளுக்கும் இந்தியாவில் தீர்வுள்ளது.

governor tamilisai,world countries ,ஆளுநர் தமிழிசை ,உலக நாடுகள்

டெல்லியில், தமிழகம் தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று கொண்டு வருகிறது. அதற்கு உதாரணம் நமதுதமிழ் செங்கோல் அங்கே தலை நிமிர்ந்து நிற்கிறது.

உலகளவில் பலமான பிரதமராக மட்டும் இன்றி, பிரபலமான பிரதமராகவும் மோடி வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நாட்டின் மணிமகுடம் என்பது கலாச்சாரம்தான். ஆனால், சில தமிழகஅமைச்சர்களூக்கு தமிழ் கலாச்சாரமே தெரிவதில்லை என அவர் கூறினார்.

Tags :