Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவிகிதத்தில் இருந்து 34 சதவிகிதமாக உயர்வு ... முதல்-அமைச்சர் அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவிகிதத்தில் இருந்து 34 சதவிகிதமாக உயர்வு ... முதல்-அமைச்சர் அறிவிப்பு

By: vaithegi Mon, 15 Aug 2022 11:09:47 AM

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவிகிதத்தில் இருந்து 34 சதவிகிதமாக உயர்வு  ... முதல்-அமைச்சர்  அறிவிப்பு

சென்னை: இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை அடுத்து நாட்டின் 76-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், மிகவும் கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து இந்த நிலையில், நாட்டின் சுதந்திரதின விழாவையொட்டி சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார். இதை தொடர்ந்து உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.

prime minister,increase in rates , முதல்-அமைச்சர்  ,அகவிலைப்படி உயர்வு  ,

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவிகிதத்தில் இருந்து 34 சதவிகிதமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார். இது 1.7.2022 முதல் அகவிலைப்படி 3 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு 34 சதவிகிதமாக அதிகரித்து வழங்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும் அகவிலைப்படி உயர்வு அரசு ஊழியர்கள் மட்டுமின்றி ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும் என்றும் அறிவித்தார்.

Tags :