பொதுச் சொத்து சேதம் விளைவித்ததாக டில்லி முதல்வருக்கு கோவத போலீசார் சம்மன்
By: Nagaraj Sat, 15 Apr 2023 11:00:06 PM
கோவா: டில்லி முதல்வருக்கு சம்மன்... பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது தொடர்பான வழக்கில் ஏப்ரல் 27ஆம் தேதி ஆஜராகுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கோவா காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கோவா மாநில சட்டசபைக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்தத் தேர்தலின்போது, பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியதாக ஆம் ஆத்மி கட்சியினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை நடந்து வரும் நிலையில், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வரும் ஏப்ரல் 27ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது கட்சி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.