Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும்

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும்

By: Nagaraj Fri, 28 Oct 2022 09:21:20 AM

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும்

காஞ்சிபுரம்: உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு வரும் நவம்பர் 1ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நவம்பர் 1ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டத்தை நடத்த வேண்டும்.

gram sabha,meeting,district collector,instruction,sanitation guards,awareness , கிராம சபை, கூட்டம், மாவட்ட ஆட்சியர், அறிவுறுத்தல், தூய்மைக் காவலர்கள், விழிப்புணர்வு

இந்த கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து முழுமையாக விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.


கிராம ஊராட்சி அளவில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைக் காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளைச் சார்ந்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு கிராம சபையில் பாராட்டுத் தெரிவிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :