ரமலான் பண்டிகையையொட்டி ஆளுநர், முதலமைச்சர் வாழ்த்து
By: vaithegi Sat, 22 Apr 2023 10:45:37 AM
சென்னை: ரமலான் பண்டிகையை முன்னிட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக ஒரு மாத நோன்பை கடைப்பிடித்து,
இல்லாதோருக்கு ஈகை அளித்து சகோதரத்துவத்தை முன்னிறுத்தும் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ஈகைத்திருநாளாம் ரமலான் திருநாள் வாழ்த்துகள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று வெளியிட்ட வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுளதாவது, “மனிதநேயம் போற்றும் ராமலான் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர , சகோதரிகளுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்.
நமது திராவிட மாடல் அரசும் நபிகள் பெருமானார் காட்டிய சமத்துவ சமுதாயம் அமைக்கும் பணியில் சமரசமின்றி தனது பயணத்தை தொடருகிறது; என்றென்றும் தொடரும்” என அவர் தெரிவித்துள்ளார்.