Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கார்த்திகை தீபத்திருநாளையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து

கார்த்திகை தீபத்திருநாளையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து

By: vaithegi Sun, 26 Nov 2023 10:18:25 AM

கார்த்திகை தீபத்திருநாளையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து

புதுச்சேரி : புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "தமிழ் மக்களால் பெரிதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் கார்த்திகை தீபத்திருநாளும் ஒன்றாகும்.

இந்த நாளில், இருள் மற்றும் தீமைகளை நீக்கும் முடிவில்லாத ஒளியின் ஆதாரமான சிவபெருமானின் அருளாசியைப் பெற வீடுகளிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி வைத்து கொண்டு வழிபடுகின்றனர்.

puducherry chief minister rangasamy,karthikai,greetings ,புதுச்சேரி முதலமைச்சர்  ரங்கசாமி ,கார்த்திகை ,வாழ்த்து

இதனை அடுத்து தீபத்தின் ஒளி எப்படி அனைத்து உயிரினங்களின் மீதும் விழுகிறதோ, அதுபோல் நமது அன்பும் கருணையும் மற்றவர்களுக்கு ஒளியை வழங்குவதாக அமைய வேண்டும்.

கார்த்திகை தீபத்தின் ஒளி உங்கள் வாழ்க்கையை ஒளிரச் செய்து, பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிகாட்டட்டும் என கூறி அனைவருக்கும் கார்த்திகை தீப தெரிவித்துக் கொள்கிறேன்." என்று அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Tags :