Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த தேதியன்று குடும்ப அட்டை தொடர்பான குறைகளை தீர்ப்பதற்கு குறைதீர்ப்பு முகாம்

இந்த தேதியன்று குடும்ப அட்டை தொடர்பான குறைகளை தீர்ப்பதற்கு குறைதீர்ப்பு முகாம்

By: vaithegi Sat, 14 Jan 2023 6:25:06 PM

இந்த தேதியன்று குடும்ப அட்டை தொடர்பான குறைகளை தீர்ப்பதற்கு குறைதீர்ப்பு முகாம்

சென்னை: தமிழகத்தில் குடும்ப அட்டை தொடர்பான குறைகளை தீர்ப்பதற்கு குறைதீர்ப்பு முகாம் நடைபெற்று கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த நவம்பர் மாதத்திற்கான குறைதீர்ப்பு முகாம் பற்றி அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எனவே அதன்படி வருகிற ஜனவரி 21ம் தேதி அன்று குறை தீர்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இக்குறை தீர்ப்பு முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

family card,grievance camp ,குடும்ப அட்டை , குறைதீர்ப்பு முகாம்

இதனை அடுத்து இந்த குறைதீர்ப்பு முகாம் மூலமாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், பெயர் நீக்கம், கைப்பேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களைப் பதிவு செய்தல் போன்றயவை மேற்கொள்ளலாம்.

மேலும் அத்துடன் ரேஷன் கடைகளில் பொருட்களை நேரில் சென்று வாங்க முடியாத மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களில் ஏதேனும் குறைகள் இருப்பின் அதை தெரிவிக்கலாம். இம்முகாம் மூலமாக உடனடியாக தீர்வு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :