Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் நாளை அக்டோபர் மாதத்திற்கான ரேஷன் அட்டைதாரர்களின் குறைதீர் முகாம்

சென்னையில் நாளை அக்டோபர் மாதத்திற்கான ரேஷன் அட்டைதாரர்களின் குறைதீர் முகாம்

By: vaithegi Fri, 07 Oct 2022 6:36:13 PM

சென்னையில் நாளை அக்டோபர் மாதத்திற்கான ரேஷன் அட்டைதாரர்களின் குறைதீர் முகாம்

சென்னை: தமிழகத்தில் ரேஷன் கடைகளின் வாயிலாக அரசு மளிகை பொருட்களை மானிய விலையில் விநியோகித்து கொண்டு வருகிறது. ரேஷன் அட்டைதாரர்களின் குறைகளை கேட்டறியும் பணியையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன்படி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் அக்டோபர் மாதத்திற்கான குறைதீர் முகாம் நாளை (அக்.08) நடைபெறவுள்ளது.

இந்த முகாமானது சென்னையின் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களிலும் நாளை காலை 10 மணி முதல் 1 மணி வரை குறைதீர் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

chennai,ration card holder ,சென்னை, ரேஷன் அட்டைதாரர்

இதனை அடுத்து இதில் கலந்து கொண்டு ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதில் உங்களுக்கு உள்ள இடர்பாடுகளை தெரிவிக்கலாம். மேலும் ஏதேனும் புகார்கள் இருந்தால் மனு அளிக்கலாம்.

இதைத்தொடர்ந்து இந்த முகாமில் புகார் அளிப்பதை தொடர்ந்து குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்து ஆகிய பணிகளும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :