Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற ஏப்.08 ரேஷன் கடை தொடர்பான குறைதீர்ப்பு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற ஏப்.08 ரேஷன் கடை தொடர்பான குறைதீர்ப்பு கூட்டம்

By: vaithegi Thu, 06 Apr 2023 1:13:30 PM

புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற ஏப்.08 ரேஷன் கடை தொடர்பான குறைதீர்ப்பு கூட்டம்

புதுக்கோட்டை : தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் வாயிலாக ஏழை எளிய மக்களுக்கு மாதம் மளிகை பொருட்கள் குறைந்த விலையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

எனவே வாயிலாக ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் ரேஷன் அட்டைதாரர்களின் குறைபாடுகளை கேட்டறிய அவ்வப்போது மண்டலம் வாரியாக குறைதீர்ப்பு கூட்டமும் நடத்தப்பட்டு கொண்டு வருகிறது.

grievance meeting,ration shop ,குறைதீர்ப்பு கூட்டம்,ரேஷன் கடை

அந்த வகையில் வரும் 8-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் கடை குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டமானது அந்த மாவட்டத்திலுள்ள தாசில்தார் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1மணி வரை நடைபெறும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதில் பொதுமக்கள் மற்றும் குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை கோரிக்கைகளையும் முன் வைக்கலாம். அதை த் தொடர்ந்து ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தகவல்கள் மாற்றுதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படும். இதில் கலந்து கொண்டு ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags :