Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவாரூரில் ஜூலை 8ம் தேதி ரேஷன் அட்டைதாரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

திருவாரூரில் ஜூலை 8ம் தேதி ரேஷன் அட்டைதாரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

By: vaithegi Thu, 06 July 2023 11:49:16 AM

திருவாரூரில் ஜூலை 8ம் தேதி ரேஷன் அட்டைதாரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

திருவாரூர் : தமிழகத்தில் ரேஷன் பொது விநியோக திட்டத்தை மேலும் மேம்படுத்திடும் வகையில் மாதந்தோறும் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கொண்டு வருகிறது. இக்குறைதீர் முகாம்கள் வாயிலாக ரேஷன் கடைகளில் அட்டைதாரர்களுக்கு உள்ள குறைகள் கேட்டறியப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்த குறைதீர்ப்பு முகாம் திருவாரூர் மாவட்டத்தில் வருகிற ஜூலை 8ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட சிறப்பு பொது மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

ration card holders,grievance redressal meeting ,ரேஷன் அட்டைதாரர்கள்,குறை தீர்க்கும் கூட்டம்

இந்த முகாம் தேவர்கண்டநல்லூர், கீழ்க்குடி, திருக்களம்பூர், தொழூவூர், கோட்டூர், கப்பலுடையான், கச்சனம், காவனூர், மேலநம்மங்குறிச்சி கிராமத்தில் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகங்களில் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்து உள்ளது.

எனவே இதில் கலந்து கொண்டு ரேஷன் அட்டைதாரர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். அத்துடன் குடும்ப அட்டையில் பெயர், முகவரி, மொபைல் எண் ஆகியவற்றை மாற்ற கோரியும் மனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :