Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் குரூப் 2 தேர்வு முடிவுகள் ஜூலை இறுதியில் வெளியீடு

தமிழகத்தில் குரூப் 2 தேர்வு முடிவுகள் ஜூலை இறுதியில் வெளியீடு

By: vaithegi Tue, 05 July 2022 11:13:09 AM

தமிழகத்தில்  குரூப் 2 தேர்வு முடிவுகள் ஜூலை இறுதியில் வெளியீடு

தமிழகம்: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC), வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர் மற்றும் குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் 2A போட்டித்தேர்வுகளை கடந்த மே மாதம் 21ம் தேதியன்று நடத்தியது. அந்த வகையில் மொத்தம் 5,529 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வுகளை தமிழகம் முழுவதும் உள்ள 8 லட்சம் விண்ணப்பதாரர்கள் எழுதி இருந்தனர்.

இந்நிலையில் TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வுக்கான முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்தபடி கடந்த மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.

group 2,exam result ,குரூப் 2 ,தேர்வு முடிவு

இதனை தொடர்ந்து ஜூலை மாதம் TNPSC குரூப் 2 தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும் என தேர்வாணையத்தின் உத்தேச தேர்வு முடிவு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாத இறுதிக்குள் குரூப் 2 தேர்வுக்கான முடிவுகளை தேர்வர்கள் எதிர்பார்க்கலாம் என்று தகவல் பெறப்பட்டுள்ளது. இதற்கிடையில் வரும் ஜூலை 24ம் தேதியன்று கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான TNPSC குரூப் 4 தேர்வு நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :