Advertisement

குரூப் 4 தேர்வு முடிவில் குளறுபடியா

By: vaithegi Sat, 25 Mar 2023 3:10:06 PM

குரூப் 4 தேர்வு முடிவில் குளறுபடியா

சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் பல போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே இதன் மூலம் பல அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

அதில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு குரூப் 4 பதவிகளுக்கான எழுத்து தேர்வானது கடந்தாண்டு ஜூலை மாதம் 24-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

இத்தேர்வின் மூலம் 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்நிலையில், வாரலாறு காணாத வகையில் 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய குரூப் 4 தேர்வு முடிவுகள், 7 மாதங்களுக்கு பிறகு நேற்று வெளியானது.

group 4 exam,results ,குரூப் 4 தேர்வு ,முடிவுகள்

பல லட்சம் பேர் எதிர்பார்ப்புகளில் வெளியான குரூப் 4 தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் உள்ளதாக, தேர்வர்கள் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

அதாவது, தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் தரவரிசையில் குறைந்த ரேங்கிலும், குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் தரவரிசையில் முன்னணியிலும் உள்ளனர். இதனால் தேர்வர்கள் பலர் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். நீண்ட நாட்கள் காத்திருந்த தேர்வர்களுக்கு, தேர்வாணையத்தின் மதிப்பீட்டில் ஏற்பட்ட குளறுபடி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவுள்ளது.

Tags :