Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விவசாயிகளின் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு பெருகி வரும் ஆதரவு

விவசாயிகளின் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு பெருகி வரும் ஆதரவு

By: Karunakaran Sun, 06 Dec 2020 5:18:08 PM

விவசாயிகளின் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு பெருகி வரும் ஆதரவு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் புராரி மைதானத்திலும், டெல்லியின் எல்லைப்பகுதிகளிலும் விவசாயிகளின் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் எல்லை நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர்.

பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. விவசாயிகளை சமாதானப்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. 5 சுற்றுகள் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

delhi,support,nationwide blockade,farmers ,டெல்ஹி, ஆதரவு, நாடு தழுவிய முற்றுகை, விவசாயிகள்

6ம் சுற்று பேச்சுவார்த்தை 9ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 11வது நாளாக போராட்டத்தை தொடரும் விவசாயிகள், தங்களுக்கு தீர்வு கிடைத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி உள்ளனர். போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பது தொடர்பாக சிங்கு எல்லையில் இன்று விவசாய சங்க நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் 8ம் தேதி நடைபெறும் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தரும்படி விவசாய சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன. காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. வங்கிகள் சங்கமும் ஆதரவு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags :
|