Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜி.எஸ்.கே. மற்றும் சனோபி நிறுவனங்களுடன் 6 கோடி தடுப்பூசிக்கு இங்கிலாந்து ஒப்பந்தம்

ஜி.எஸ்.கே. மற்றும் சனோபி நிறுவனங்களுடன் 6 கோடி தடுப்பூசிக்கு இங்கிலாந்து ஒப்பந்தம்

By: Karunakaran Thu, 30 July 2020 10:27:12 AM

ஜி.எஸ்.கே. மற்றும் சனோபி நிறுவனங்களுடன் 6 கோடி தடுப்பூசிக்கு இங்கிலாந்து ஒப்பந்தம்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் 6 கோடி தடுப்பூசி டோஸ் வாங்குவதற்கு பிரபல மருந்து நிறுவனங்களான ஜி.எஸ்.கே மற்றும் சனோபி ஆகியவற்றுடன் இங்கிலாந்து அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

மறுசீரமைப்பு புரத அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த நிறுவனங்கள் தடுப்பூசி ஒன்றை உருவாக்குகின்றன. இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. அடுத்த ஆண்டு கோடை காலத்துக்குள் இந்த தடுப்பூசிக்கு ஒழுங்குமுறை அங்கீகாரத்தை அபெற்று விடலாம் என இந்த மருந்து நிறுவனங்கள் எதிர்பார்த்துள்ளது.

sanobi company,gsk,england,corona vaccine,dealing ,சனோபி நிறுவனம், ஜி.எஸ்.கே, இங்கிலாந்து, கொரோனா தடுப்பூசி, ஒப்பந்தம்

தற்போது இவ்விரு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்தது குறித்து இங்கிலாந்து வர்த்தக மந்திரி அலோக் சர்மா கூறுகையில், ஜி.எஸ்.கே. மற்றும் சனோபி போன்ற பல விதமான நம்பிக்கைக்கு உரிய தடுப்பூசிகளின் ஆரம்ப அணுகலை நாம் பாதுகாப்பது முக்கியம். இதனால் பொதுமக்களைப் பாதுகாக்கவும், உயிர்களைக் காப்பாற்றவும் முடியும் என்று கூறினார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகாவும் கூட்டாக உருவாக்கும் தடுப்பூசியை 10 கோடி டோஸ் வாங்க ஏற்கனவே இங்கிலாந்து அரசு ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|