Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளி, கல்லூரிகளில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு குறித்த .. வழிகாட்டு நெறிமுறைகள்

பள்ளி, கல்லூரிகளில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு குறித்த .. வழிகாட்டு நெறிமுறைகள்

By: vaithegi Mon, 01 Aug 2022 12:50:22 PM

பள்ளி, கல்லூரிகளில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு குறித்த .. வழிகாட்டு நெறிமுறைகள்

சென்னை: நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி, சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. பல்வேறு மதங்கள், மொழிகள், கலாச்சாரங்களை உள்ளடக்கிய இந்தியாவில் அனைவரும் ஒன்றிணைந்து சமத்துவமாக கொண்டாடும் ஒரு நிகழ்வு சுதந்திர தின விழா. இப்போது இந்த ஆண்டிற்கான சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கு பல மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் திட்டமிட்டு வருகின்றன.

இதனையொட்டி பள்ளி, கல்லூரிகளில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு அனைத்து கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையுடன், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை இணைத்து செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

national flag,guiding principles ,தேசியக்கொடி ,வழிகாட்டு நெறிமுறைகள்

அதன்படி அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா அன்று தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி காலை 9 மணிக்கு பிறகு தொடங்கப்பட வேண்டும்.
கொரோனா சூழ்நிலையை பொறுத்து, நேரடியாகவோ அல்லது ஆன்லைன் வழியாகவோ (விர்ச்சுவல் பார்மெட்) தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வை ஏற்பாடு செய்யலாம்.

மேலும் நேரடியாக நடக்கும் நிகழ்வில் அனைத்து பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் பங்கேற்க வேண்டும். பெற்றோர், பாதுகாவலர்கள் கலந்து கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும்.
தேசிய போர் நினைவிடம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் அது தொடர்பாக தகவல்களை அன்றைய தினம் மக்களிடம் கொண்டு செல்வதற்கு பயன்படுத்தலாம். இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு பொதுவாக வெளியிடப்பட்டவை ஆகும்

Tags :