Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை- நெல்லை வழியாக செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கத்தில் வரும் அக்.30 ஆம் தேதி வரை மாற்றம்

சென்னை- நெல்லை வழியாக செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கத்தில் வரும் அக்.30 ஆம் தேதி வரை மாற்றம்

By: vaithegi Wed, 18 Oct 2023 1:58:41 PM

சென்னை- நெல்லை வழியாக செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கத்தில் வரும் அக்.30 ஆம் தேதி வரை மாற்றம்


சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையிலிருந்து நெல்லை வழியாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதாவது இந்த ரயில் தெற்கு ரயில்வே மண்டலத்திற்கு உள்ளே வெகு தூரம் இயக்கப்படும் ரயில்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த ரயில் சென்னையிலிருந்து மதுரை நெல்லை திருவனந்தபுரம் வழியாக குருவாயூர் வரை செல்கிறது.

guruvayur express train,chennai,nellie ,குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்,சென்னை,நெல்லை

ஆனால் திருவனந்தபுரம் கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் வருகிற அக். 30 ஆம் தேதி வரை சென்னை எழும்பூரிலிருந்து காலை 9.45 மணிக்கு புறப்படும்

இதனை அடுத்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் பயணத்தில் ‘எர்ணாகுளம் குருவாயூர்’ இடையேயான பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்நாட்களில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் எர்ணாகுளம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :