Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஹத்ராஸ் பாலியல் குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட வேண்டும் - ராம்தாஸ் அத்வாலே

ஹத்ராஸ் பாலியல் குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட வேண்டும் - ராம்தாஸ் அத்வாலே

By: Karunakaran Fri, 02 Oct 2020 7:28:56 PM

ஹத்ராஸ் பாலியல் குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட வேண்டும் - ராம்தாஸ் அத்வாலே

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயதான பட்டியல் இன இளம்பெண், கடந்த மாதம் 14-ம் தேதி அங்குள்ள நிலத்தில் புல் அறுத்துக் கொண்டிருந்தபோது, அக்கிராமத்தை சேர்ந்த உயர் ஜாதி இளைஞர்கள் 4 பேர், அந்த பெண்ணை தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும் அந்த பெண்ணை கடுமையாக தாக்கினர்.

இந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என்பதற்காக, அந்த பெண்ணின் நாக்கையும் அறுத்ததாக தெரிகிறது. படுகாயங்களுடன் கிடந்த அப்பெண் மீட்கப்பட்டு ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அப்பெண்ணுக்கு முதுகு தண்டுவடம் நொறுங்கி இருப்பதும், பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

hadras sex,offenders,hanged,ramdas adwale ,ஹத்ராஸ் செக்ஸ், குற்றவாளிகள், தூக்கு, ராம்தாஸ் அட்வாலே

உடல்நிலை மோசமடைந்ததால் அந்த பெண் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. டெல்லியிலும், உத்தர பிரதேசத்திலும் போராட்டங்கள் வெடித்தன. அரசியல்வாதிகள், திரையுலகினர், விளையாட்டுத் துறையினர் என பல்வேறு தரப்பினரும் நீதி கேட்டு குரல் கொடுத்தனர்.

இந்நிலையில் கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். தற்போது மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே, நாளை நான் லக்னோ செல்கிறேன். முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் கவர்னர் ஆனந்திபென் படேல் ஆகியோரை சந்தித்துப் பேச உள்ளேன். குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடப்பட வேண்டும் என்று கூறினார்.


Tags :
|