Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சர்வதேச விமான போக்குவரத்து எப்போது தொடங்கப்படும் என ஹர்தீப்சிங் பூரி விளக்கம்

சர்வதேச விமான போக்குவரத்து எப்போது தொடங்கப்படும் என ஹர்தீப்சிங் பூரி விளக்கம்

By: Karunakaran Wed, 17 June 2020 10:49:29 AM

சர்வதேச விமான போக்குவரத்து எப்போது தொடங்கப்படும் என ஹர்தீப்சிங் பூரி விளக்கம்

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் விமான போக்குவரத்து, ரயில் போக்குவரத்து என போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. கடந்த மாதம் 25-ந் தேதி உள்நாட்டு விமான போக்குவரத்து மீண்டும் சேவையை தொடங்கியது. இருப்பினும் சர்வதேச விமான போக்குவரத்து இன்னும் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில், மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப்சிங் பூரி சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்குவது பற்றி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், கொரோனா வைரசின் போக்கு நாம் கணிக்கும் அளவுக்கு இருந்தால், ஒட்டுமொத்த சிவில் விமான போக்குவரத்து நடைமுறையும் ஒத்துழைத்தால், சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்குவது பற்றி அடுத்த மாதம் நாம் முடிவு எடுக்க தொடங்கலாம் என்று கூறியுள்ளார்.

hardeep singh puri,coronavirus,international aviation,minister of aviation ,சர்வதேச விமான போக்குவரத்து,ஹர்தீப்சிங் பூரி,விமான போக்குவரத்து மந்திரி

மேலும் அவர், இதுகுறித்து மாநிலங்களின் நிலவரத்தின் அடிப்படையில் தான் முடிவு எடுக்க வேண்டும். மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மட்டும் எடுக்க முடியாது. தென்னிந்தியாவில் ஒரு பெரிய மாநிலம், நாம் உள்நாட்டு விமான போக்குவரத்தை திறந்துவிட்ட நிலையில், மீண்டும் முழு ஊரடங்கை அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வித பின்னடைவோ, ஆபத்தோ இல்லாமல் முடிவு எடுக்க வேண்டும் எனவும், சர்வதேச நாடுகளில் இருந்து பயணிகள் வரும்போது, அவர்களை ஏற்றுக்கொள்ள மாநிலங்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும், அதற்காக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags :