Advertisement

கேரளா தொழிலதிபர் புகாரின் பேரில் ஹரி நாடார் கைது

By: Nagaraj Tue, 28 Feb 2023 3:28:52 PM

கேரளா தொழிலதிபர் புகாரின் பேரில் ஹரி நாடார் கைது

பெங்களூரு: சென்னை போலீசார் கைது செய்தனர்... பெங்களூரு அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ள ஹரி நாடார், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட ஹரி நாடார் 37,726 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்,

மேலும் தமிழ்நாட்டில் சுயேட்சை வேட்பாளர்களில் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளராக இருந்தார் .இவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2021 மே மாதம் குற்ற வழக்கில் கைது செய்து பெங்களூரு அக்ரஹாரா மத்திய சிறையில் அடைத்தனர். அப்போது, கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் இஸ்மாயில் பரகத், ஹரி நாடார் மீது தமிழக போலீசில் மோசடி புகார் அளித்தார்.

arrested,bangalore central crime branch police,hari nadar, ,கைது, சென்னை மத்திய குற்றப்பிரிவு, ஹரி நாடார்

அவர் புகார் அளித்து 22 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) ஆய்வாளர் பிரசித் தீபா பெங்களூரு அக்ரஹாரா மத்திய சிறையில் கடந்த 22 மாதங்களாக விளக்கமறியல் கைதியாக இருந்த ஹரி நாடாரை இன்று காலை 11.15 மணிக்கு கைது செய்தார்.

ஓரிரு நாட்களில், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரசித் தீபா தலைமையில், தலைமை நீதிபதி முன், ஹரி நாடார் ஆஜர்படுத்தப்படுவார்

Tags :