மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா மலேசியா பிரதமர்... இன்று தேர்தல்
By: Nagaraj Sat, 12 Aug 2023 4:32:00 PM
மலேசியா: மலேசியாவில் 6 மாநிலங்களில் இன்று தேர்தல் நடக்கிறது. மக்களின் எதிர்பார்ப்பை பிரதமர் அன்வர் இப்ராஹிம் பூர்த்தி செய்தாரா இல்லை என்பது விரைவில் தெரிந்து விடும்.
மலேசியாவில், 6 மாநிலங்களுக்கானத் தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
8 மாதங்களுக்கு முன் பிரதமராகப் பொறுப்பேற்ற அன்வர் இப்ராஹிம் தலைமையிலான ஆளும் கட்சிக்கும், தீவிர பழமைவாதியான முகைதீன் யாசின் தலைமையிலான எதிர்கட்சிக்கும் இடையே பினாங்கு, சிலாங்கூர், கெடா உள்ளிட்ட 6 மாநிலங்களில் பலப்பரீட்சை நடைபெற்று வருகிறது.
வாக்குரிமை பெற்ற ஒரு கோடி மலேசியர்கள் தேர்தல் முடிவை தீர்மானிக்க உள்ளனர். 8 மாதங்களுக்கு முன் பிரதமராகப் பொறுப்பேற்ற அன்வர் இப்ராஹிம் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தாரா என்பது தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவரும் என கூறப்படுகிறது.