Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தன்னிச்சையாக தேர்வு செய்துள்ளனர்; புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் வருத்தம்

தன்னிச்சையாக தேர்வு செய்துள்ளனர்; புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் வருத்தம்

By: Nagaraj Mon, 10 Aug 2020 09:56:43 AM

தன்னிச்சையாக தேர்வு செய்துள்ளனர்; புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் வருத்தம்

தன்னிச்சை முடிவு...தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசன பிரதிநிதி தன்னிச்சையாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

தேசியப் பட்டியல் ஆசன தெரிவு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் பங்காளிக்கட்சிகளாக புளொட் மற்றும் ரெலோ கட்சிகளுக்கும் அறிவிக்கப்படாமலேயே முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் நடத்திய ஊடக சந்திப்பிலேயெ இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

national list,mavai sonathirajah,siddharthan,condemnation ,தேசிய பட்டியல், மாவை சோனாதிராஜா, சித்தார்த்தன், கண்டனம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் அம்பாறை, நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தவராசா கலையரசனுக்கு வழங்கப்படுவதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், குறித்த முடிவு ஒட்டுமொத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் முடிவு இல்லை. தமக்கு அறிவிக்கப்படாமல் இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டமைக்கு கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த தேசியப் பட்டியல் ஆசனத்தை மாவை சேனாதிராஜாவுக்கு வழங்குவதே சிறப்பானது எனவும், இதுகுறித்து பரிந்துரைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :