Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காவலர் தேர்வு எழுதியிருக்கீங்களா... விடை குறிப்பு வெளியிட்டாச்சாம்

காவலர் தேர்வு எழுதியிருக்கீங்களா... விடை குறிப்பு வெளியிட்டாச்சாம்

By: Nagaraj Tue, 06 Dec 2022 10:24:41 AM

காவலர் தேர்வு எழுதியிருக்கீங்களா... விடை குறிப்பு வெளியிட்டாச்சாம்

சென்னை: காவலர் தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு... காவலர் தேர்வுக்கான விடை குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பு வீரர் என காலியாக இருந்த 3, 552 இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.

officials,discrepancy,website,candidates,answer note ,
அதிகாரிகள், முரண்பாடு, இணையதளம், தேர்வர்கள், விடை குறிப்பு

இதற்கான தேர்வு கடந்த மாதம் 27- ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 295 தேர்வு மையங்கள் மூலம் 2 லட்சத்து 99 ஆயிரத்து 820 பேர் எழுதினர். இந்த எழுத்து தேர்வுக்கான விடை குறிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நேற்று தங்களது இணையதளத்தில் வெளியிட்டது.


இந்நிலையில் இந்த இணையதளத்திற்கு சென்று தேர்வர்கள் விடை குறிப்பை பார்த்து வருகின்றனர். இதில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் வருகின்ற 10ம் தேதிக்குள் தமிழ்நாடு சீருடை பணியாளர் அலுவலகத்திற்கு தபால் மூலம் மட்டுமே தெரிவிக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Tags :