சொன்னதுபடி செய்தார்... சுடப்பட்ட இடத்தில் இருந்து மீண்டும் பேரணி
By: Nagaraj Fri, 11 Nov 2022 9:02:59 PM
இஸ்லாமாபாத்: சொன்னதுபடியே தான் சுடப்பட்ட இடத்திலிருந்து மீண்டும் பேரணி தொடங்கச் செய்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான். இந்த பேரணிக்கு முன்னாள் அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தலைமை வகித்தார்.
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சுடப்பட்ட இடத்தில் இருந்து மீண்டும் பேரணி நடைபெற்றது.பஞ்சாப் மாகாணத்தின் வசீராபாத்தில் நடைபெற்ற பேரணியின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில், இம்ரான் கானுக்கு காயம் ஏற்பட்டது.
இதனால், பேரணி நிறுத்தப்பட்டு, ஒத்தி வைக்கப்பட்டது. தன் மீது
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் மீண்டும் பேரணியைத் தொடர போவதாக
இம்ரான் கான் தெரிவித்திருந்தார்.
அதன்படி, வசீராபாத்தில் நேற்று
மீண்டும் தொடங்கிய பேரணிக்கு முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத்
குரேஷி தலைமை வகித்தார். இஸ்லாமாபாத் பேரணியில் தனது ஆதரவாளர்களுடன்
இம்ரான் கான் கூடிய விரைவில் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.