தாய்லாந்தில் நடந்த கராத்தே போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மானாமதுரையை சேர்ந்தவர்
By: Nagaraj Wed, 08 Feb 2023 11:49:59 AM
மானாமதுரை: மாணவருக்கு வெண்கலப்பதக்கம்... தாய்லாந்தில் நடந்த கராத்தே போட்டியில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
மானாமதுரை ரயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் சிவநாகார்ஜூன். மானாமதுரையில் கராத்தே பயிற்சியாளராக உள்ளார். 3வது மாஸ்டர்ஸ் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்தில் உள்ள தேசிய விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 4ம் தேதி நடைபெற்றது.
இப்போட்டியில் கராத்தே மாஸ்டர் சிவநாகார்ஜுனா 40 வயது முதல் 44 வயது வரையிலான கடா பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
வெண்கலப் பதக்கம் வென்ற வீரனுக்கு மானாமதுரை மக்கள் பாராட்டு தெரிவித்தனர் .
Tags :
praised |