Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தன் அமைச்சின் செயற்பாடுகளை ராஜாங்க அமைச்சரிடம் கையளித்தார்

தன் அமைச்சின் செயற்பாடுகளை ராஜாங்க அமைச்சரிடம் கையளித்தார்

By: Nagaraj Fri, 30 Sept 2022 10:21:19 PM

தன் அமைச்சின் செயற்பாடுகளை ராஜாங்க அமைச்சரிடம் கையளித்தார்

கொழும்பு: வர்த்தமானி வெளியீடு... துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தனது அமைச்சின் கீழ் உள்ள விடயதானங்கள் மற்றும் செயற்பாடுகளை இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவிடம் கையளித்து அசாதாரண வர்த்தமானியை வெளியிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலாலி, மட்டக்களப்பு, இரத்மலானை விமான நிலையங்களின் அபிவிருத்திகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிய வருகிறது. மேலும் காங்கேசன்துறை மற்றும் ஒலுவில் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதும் அவரது பணிகளில் அடங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

gazette,notification,minister of state,ports,aviation ,வர்த்தமானி, அறிவித்தல், இராஜங்க அமைச்சர், துறைமுகங்கள், விமான போக்குவரத்து

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களிலும் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சருக்கு இராஜாங்க அமைச்சர் ஆதரவளிக்க வேண்டும் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் அரசியல் அரங்கில் சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|