Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அவர் ஒரு தனிமனிதர்... அழைக்க வேண்டிய அவசியம் இல்லை: ஓபிஎஸ் பற்றி முன்னாள் அமைச்சர் விமர்சனம்

அவர் ஒரு தனிமனிதர்... அழைக்க வேண்டிய அவசியம் இல்லை: ஓபிஎஸ் பற்றி முன்னாள் அமைச்சர் விமர்சனம்

By: Nagaraj Wed, 19 July 2023 7:03:31 PM

அவர் ஒரு தனிமனிதர்... அழைக்க வேண்டிய அவசியம் இல்லை: ஓபிஎஸ் பற்றி முன்னாள் அமைச்சர் விமர்சனம்

சென்னை: அவரை அழைக்க வேண்டிய அவசியமே இல்லை... அதிமுகவுக்கும் ஓபிஎஸ்-க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் ஒரு தனி மனிதர். அவரை தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்துக்கு அழைக்க வேண்டிய அவசியம் கிடையாது" என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதிமுக சார்பில் நாளை விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் குறித்தும், அதிமுக மாநாடு ஏற்பாடுகள் குறித்தும், புதிய உறுப்பினர் சேர்த்தல், புதுப்பித்தல் பணிகள் குறித்தும் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறியதாவது:

”அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கையை 2 கோடியாக அதிகரிக்க கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார். இதன்படி தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை வேகமாக நடைபெற்று வந்தது. இன்று உறுப்பினர் சேர்க்கைக்கு கடைசி நாள் என்பதால் சென்னை ராயபுரம் பகுதியில் மட்டும் 1.75 லட்சம் பேருக்கு மேல் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர்.

they will arrest,ministers,dmk,cabinet,sleep,will not exist ,கைது செய்வார்கள், அமைச்சர்கள், திமுக, அமைச்சரவை, தூக்கம், இருக்காது

தமிழகத்தில் உள்ள திமுக அரசுக்கு மக்களை பாதிக்கும் எது குறித்தும் கவலையில்லை. இந்த திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட அதிமுக சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர நாத்தை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்னர் நடைபெறும் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு அழைத்திருப்பது ஒரு சுயேட்சை என்ற அடிப்படையில் தான் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும். டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஏனென்றால் அதிமுக சார்பில் அவருக்கு எதிராக ஏற்கெனவே கடிதம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்றத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் ரவீந்திரநாத். அந்த வகையில் ரவீந்திர நாத்துக்கு சுயேட்சை வேட்பாளர் என்ற வகையில் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் அடுத்தடுத்து அமைச்சர்களுக்கு நெஞ்சுவலி வந்து கொண்டே இருக்கிறது. முதலில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி வந்துவிட்டது. தற்போது அமைச்சர் பொன்முடிக்கு நெஞ்சுவலி ஆரம்பிக்கிறது. அடுத்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நெஞ்சு வலி வரும். எப்போது கைது செய்வார்கள் என்று பொன்முடி இரவெல்லாம் தூங்காமல் இருப்பார். அப்படி தான் அமைச்சர்களுக்கு இரவெல்லாம் தூக்கம் இருக்காது. முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சரவையில் இருப்பவர் யாரும் தூங்கமாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|
|