உண்ணாவிரதம் இருக்கப் போறாராம்... சவுக்கு சங்கர் பற்றி வெளியான தகவல்
By: Nagaraj Fri, 30 Sept 2022 10:04:49 PM
கடலூர்: பார்வையாளர்களுக்கு அனுமதி அளிப்பதில்லை. புழல் சிறைக்கு தன்னை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி சவுக்கு சங்கர் சிறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளாராம்.
நீதித்துறை குறித்து அவமதிப்பு செய்யும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக சவுக்கு சங்கர் மீது வழக்கு தொடரப்பட்டு அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் தற்போது மத்திய கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு அரசு ஆவணங்களை கசியவிட்டதாக இவர் அரசு பணியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நீதித்துறை குறித்து அவமதிப்பு செய்யும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக சவுக்கு சங்கர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை பார்வையாளர்கள் சந்திக்க மறுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பார்வையாளர்களைப் பார்க்க அனுமதி மறுப்பது மற்றும் 24 மணி நேரமும் தனிமை சிறையில் வைத்திருக்கிறார்கள் என்று கூறி சவுக்கு சங்கர் நாளை முதல் சிறையில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் எனவும் அவர் இந்த போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது.