Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காய்ச்சல் அதிகரிப்பு .. குடிநீரை காய்ச்சி குடிக்குமாறு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தல்

காய்ச்சல் அதிகரிப்பு .. குடிநீரை காய்ச்சி குடிக்குமாறு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தல்

By: vaithegi Fri, 13 Oct 2023 12:40:50 PM

காய்ச்சல் அதிகரிப்பு   ..  குடிநீரை காய்ச்சி குடிக்குமாறு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தல்

சென்னை: சுகாதாரத் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: மழைக் காலத்தில் வேகமெடுக்கக் கூடிய சில நோய்களை பரப்பும் வைரஸ்கள் சூழல் காரணமாக பல்கிப் பெருகுவதால் பலரும் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். இச்சிரமங்களை தவிர்க்க, குடிநீரை காய்ச்சிய பிறகே பருக வேண்டும். மேலும், முடிந்தவரை சூடான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும்.

இதையடுத்து கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்லும் போதும், பேருந்துகள் போன்ற பொது போக்குவரத்து முறைகளில் பயணிக்கும் போதும் முகக் கவசத்தை பயன்படுத்த வேண்டும். அதேபோன்று, நம் சுற்றுப்புறத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

health department,fever , சுகாதாரத் துறையினர்,காய்ச்சல்


அதிலும் குறிப்பாக, நோய் பரப்பும் கொசுக்களின் உற்பத்திக்கு, இருப்பிடத்தைச் சுற்றி தண்ணீர் தேங்குவதே முக்கிய காரணமாக இருக்கிறது.எனவே, முடிந்தவரை அதற்கு இடமளிக்காமல் சுற்றுப் புறத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டாலும் சுயமாக சிகிச்சை பெறுவதை தவிர்த்து மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்..

Tags :