Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

By: Nagaraj Thu, 10 Aug 2023 7:48:12 PM

கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் விசாலாட்சி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சீதாலெட்சுமி, பொருளாளர் திருமாமகள் ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், தடுப்பூசி நாளன்று தடுப்பூசி பணியுடன் யு-வின் ஆப் சென்ற புதிய செயலி மூலம் டேட்டா என்ட்ரி பணியையும் சேர்த்து பார்த்திட வலியுறுத்தும் அரசின் அரசாணையை திரும்ப பெற வேண்டும்.

demonstration,night time,meeting,thanjavur ,ஆர்ப்பாட்டம், இரவு நேரம், ஆய்வுக்கூட்டம், தஞ்சாவூர்

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஒரு டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டரை நியமிக்க வேண்டும். இதனால் சுகாதார செவிலியர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும்.

முற்றிலும் பழுதடைந்த தங்குவதற்கு தகுதியில்லா துணை சுகாதார மைய கட்டிடங்களுக்கு வாடகை பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டும். கிராம சுகாதார செவிலியர்கள் 5 வருடம் பணி முடித்தவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வழங்க வேண்டும்.

அலுவலக நேரம் தவிர்த்து இரவு நேரங்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதை தவிர்த்து, பணிக்கு சம்மந்தமில்லாத வேலைகளை செய்யச் சொல்லி மிரட்டுவதை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

Tags :