Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா என்றாலே பீதியடையத் தேவையில்லை; சுகாதாரத்துறை செயலாளர்

கொரோனா என்றாலே பீதியடையத் தேவையில்லை; சுகாதாரத்துறை செயலாளர்

By: Monisha Tue, 04 Aug 2020 4:36:05 PM

கொரோனா என்றாலே பீதியடையத் தேவையில்லை; சுகாதாரத்துறை செயலாளர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் மற்றும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

தமிழகத்தில் நாள்தோறும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் பல இடங்களில் பொதுமக்கள் முக கவசம் அணிவதை சரியாக பின்பற்றுவதில்லை. கொரோனாவின் அடுத்த அலையை தடுக்க பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினால், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தலாம்.

tamil nadu,corona virus,vulnerability,health department,radhakrishnan ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சுகாதாரத்துறை,ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் அரசு விதிமுறைகளை மக்கள் கடைப்பிடித்தாலே கொரோனாவில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளமுடியும். தமிழ்நாட்டில் நோய் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது என்பதற்காக மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

மேலும், கொரோனா என்றாலே பீதியடையத் தேவையில்லை. ஆரம்ப கால அறிகுறி தெரிந்தவுடன் அதற்கான சோதனைகளை நடத்தி உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் அதிலிருந்து மீளமுடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :