Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கனமழை ... நாளை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கனமழை ... நாளை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

By: vaithegi Thu, 03 Nov 2022 7:11:32 PM

கனமழை   ...   நாளை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

சென்னை: வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கியது. இதனையடுத்து அன்று முதல் கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் வட இலங்கையையொட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் சென்னை, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளிலும்

இதையடுத்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

holiday,heavy rain ,விடுமுறை ,கனமழை

எனவே அதன்படி புதுச்சேரி காரைக்காலில் இடைவிடாது தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. இதனால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது.

மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. பள்ளி மாணவர்களின் நலன் கருதி நாளை (நவம்பர் 04) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :