Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வருகிற 3-ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்பு

வருகிற 3-ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்பு

By: vaithegi Sun, 30 Apr 2023 12:16:18 PM

வருகிற 3-ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்பு

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்கைளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

எனவே இதன் காரணமாக தமிழகத்தில் இன்று நிலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.நாளை திருப்பத்தூர், இராணிப்பேட்டை திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிய இடங்களில் கன முதல் மிக கனமழையும்,

meteorological center,heavy rain , வானிலை ஆய்வு மையம் ,கனமழை

இதனை அடுத்து நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கள், திருப்பூர், தென்காசி, விருதுநகர், ஈரோடு, நாமக்கல், கரூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. இதேபோன்று வருகிற 02ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது.

மேலும் வருகிற 03ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அதில் தெரிவிகக்ப்பட்டுள்ளது.

Tags :