Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழை, 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழை, 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Wed, 24 Aug 2022 2:00:49 PM

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழை, 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் மீண்டும் மழைக்கான வாய்ப்பு இருப்பது என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. எனவே அதன்படி, தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை அடுத்து இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

heavy rain,meteorological center ,கனமழை ,வானிலை ஆய்வு மையம்

மேலும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி,நெல்லை, குமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதனை தொடர்ந்து சென்னையை பொறுத்தவரை 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :