Advertisement

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

By: Monisha Mon, 22 June 2020 6:00:48 PM

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நிலவும் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

tamil nadu,weather,temperature,heavy rain,cloudy ,தமிழ்நாடு,வானிலை,வெப்பச் சலனம்,கனமழை,மேகமூட்டம்

திருநெல்வேலி தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறை, சோலையாறில் தலா 6 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Tags :